டெல்லியில் பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் மூன்று பேர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஜோதி நகரில் இன்று வேகமாக வந்த மாருதி ஈகோ வேன் டெல்லி போக்குவரத்து கழக பஸ் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த கோர விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதனையடுத்து, பலத்த காயமடைந்தவர்களை மீட்ட காவல்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.