மதுரை மாவட்டத்திலுள்ள சின்ன பாண்டி கோவில் தெருவில் சின்ன கருப்பு என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் வண்டியூர் கண்மாய் கரைக்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சின்ன கருப்பு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது சின்ன கருப்பு தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சின்ன கருப்புவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.