விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்காவனம் என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கூரை தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதனை பார்த்ததும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.