திருச்சி மாவட்டத்தில் உள்ள மால்வாய் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தராஜ் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தராஜ் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் ஆனந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.