திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.பெரியபட்டியில் தீபன் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக இருக்கிறார். இந்நிலையில் தீபன் சக்கரவர்த்தி சிலரிடம் கடனாக பணம் வாங்கினார் ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் அந்த பணத்தை திரும்ப கொடுக்க இயலவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த தீபன் சக்கரவர்த்தி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.