சேலம் மாவட்டத்தில் உள்ள பச்சனம்பட்டி முதல் மேச்சேரி வரை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்ற ரூ.144 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. நேற்று பச்சனம்பட்டி அருகே நான்கு வழிப்பாதை பணிக்காக ஜல்லி தார் கலவையுடன் டிப்பர் லாரி சென்றது.

இந்நிலையில் லாரியின் சக்கரம் சாலையில் புதைந்து எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த ஜல்லி தார் கலவை சாலையில் கொட்டியது. பின்னர் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து டிப்பர் லாரியை தூக்கினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.