விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். அதே பள்ளியில் படிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவன் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பமானார். நேற்று முன்தினம் மாணவிக்கு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் மாணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.