ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை வீதியில் உள்ள வணிக வளாகத்தில் லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான வீடியோ ஸ்டுடியோ கடை அமைந்துள்ளது. நேற்று காலை கடையை திறந்து பெண் ஊழியர் வழக்கமான வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மின்சாதன பொருட்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அந்த பெண் அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கடையின் மின் இணைப்பை துண்டித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 1/2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் கம்ப்யூட்டர், மேஜை, அழகு சாதன பொருட்கள் தீயில் எரித்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.