தூத்துக்குடி மாவட்டம் முழுக்க இன்று மாலை ஆறு மணி முதல் மே 14ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெற உள்ள வீரசக்க தேவி ஆலய திருவிழாவையொட்டி இந்த 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான்கு அல்லது ஐந்து பேர் மேல் பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவிழாவில் கலந்து கொள்பவர்கள் வாள், கத்தி, கம்பு போன்ற ஆயுதங்களை ஊர்வலமாக கொண்டு வர தடை செய்துள்ளனர். பாஞ்சாலங்குறிச்சியில் நாளை மற்றும் மறுநாள் வீரசக்க தேவி ஆலய திருவிழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.