தமிழ்நாடு அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் விதமாக பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து வருகிறது. இதனால் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அந்தவகையில்  தமிழ்நாட்டில் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மின்சார வாகனம் தயாரிக்க ஹூண்டாய் நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், ‘தொழில்துறையில் ஏற்கனவே தமிழகம் முன்னேறியுள்ளது. இனி மேலும் உயரப்போகிறது. ஹூண்டாய் நிறுவனம் மூலம் நேரடியாக 15 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 2 லட்சம் பேருக்கும் வேலை கிடைக்கும்’ என தெரிவித்தார்.