புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுவளசல் கிராமத்தில் சரிதா என்பவர் வசித்து வருகிறார். இவரது அந்த பகுதியில் இருக்கும் 50 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து சரிதா தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி இறங்கி ஆட்டை பத்திரமாக மீட்டனர். இதே போல மாங்கோட்டை கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராசு என்பவருக்கு சொந்தமான ஆடும் கிணற்றில் தவறி விழுந்தது. அந்த ஆட்டுக்குட்டியையும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.