கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலகல்பூண்டி கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு விக்னேஷ் கார்த்திகா என்ற பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த விக்னேஷின் பெற்றோர் அவரை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து சொந்த ஊருக்கு திரும்பிய விக்னேஷ் பெற்றோர் அறிவுரைப்படி ஒரு இளம் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து கார்த்திகா மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விக்னேஷ் உள்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.