கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொன்னையராஜபுரத்தில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் யுகல் கேபிள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் யுகல் தனது நண்பர்களுடன் ரேஸ்கோர்ஸில் இருக்கும் சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார்.

அவர் தியேட்டரில் நின்று கொண்டிருந்தபோது திடீரென வந்த மூன்று பேர் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த 90 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து யுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.