கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் பெரிய சோழவல்லியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கூரை வீடு தீப்பிடித்து எரிந்ததை பார்த்ததும் காமராஜ் தனது குடும்பத்தினருடன் வெளியே ஓடி வந்தார்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம், இரண்டு பவுன் தங்க நகை, வீட்டிலிருந்த ஆவணங்கள் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.