விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்னகுப்பம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சிலரை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன், செல்வக்குமார், ராஜீவ் காந்தி, தமிழ்செல்வன், வெங்கடேசன், சுனில் குமார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ராஜீவ்காந்தி, செல்வகுமார் உட்பட ஆறு பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள்கள், சீட்டு கட்டுகள், பணம் ஆகிவற்றை பறிமுதல் செய்தனர்.