விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாரனேரி நதிக்குடி கிழக்கு தெருவில் வைரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கணபதி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று குடிபோதையில் வைரமுத்து அதே பகுதியில் வசிக்கும் மதுரை வீரன் என்பவருக்கு சொந்தமான கிணற்றின் மீது அமர்ந்திருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக வைரமுத்து கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வைரமுத்துவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.