சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை வித்யா நகரில் அப்சர் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார் நேற்று முன்தினம் அப்சர் உழவர் சந்தை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒருவர் அப்சரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து அப்சர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அப்சரிடம் பணம் பறிக்க முயன்ற நபர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாபு என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.