கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமியும், 18 வயது சிறுவனும் ஒருவரை ஒருவர் காதலைத்துள்ளனர். இந்நிலையில் சிறுமியை பலமுறை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து வயிறு வலி ஏற்பட்டதால் மாணவியை பெற்றோர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மாணவியை பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் படி போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தியதில் சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.