கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் கீழ்பம்மம் பகுதியில் ஒர்க் ஷாப் அமைந்துள்ளது. இந்த ஒர்க் ஷாப்பில் தனியார் கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான கல்லூரி வாகனத்தில் பழுது நீக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் தொழிலாளர்கள் வாகனத்தில் வெல்டிங் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனடியாக தீ அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது.

இதுகுறித்து அறிந்த குழித்துறை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வாகனத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் மற்ற வாகனங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.