கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாணியக்குடி பகுதியில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் . இந்நிலையில் குளச்சல் பேருந்து நிலையத்தில் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தும் ரிசிபன் என்பவர் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கல்லூரி செல்வதற்காக மாணவி குளச்சல் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது ரிசிபன் மனைவியிடம் நீ என்னை காதலிக்க மாட்டாயா? என கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கோபத்தில் ரிசிபன் மாணவியின் கன்னத்தில் அறைந்தார். மேலும் மாணவி அணிந்திருந்த கல்லூரி சீருடைய கிழித்து ரிசிபன் மிரட்டல் விடுத்ததால் செய்வதறியாது மாணவி கதறி அழுதார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் ரிசிபன் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து மாணவி குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரிசிபனை கைது செய்தனர்.