கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சூரியக்கோடு மண்ணறவிளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் விஜூ என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தாயும், தந்தையும் ஏற்கனவே இறந்துவிட்டனர். மேலும் விஜூவுடன் பிறந்தவர்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த விஜூ திடீரென வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் இறப்பது போன்ற வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது விஜூ தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பே விஜூ கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கதாகும்.