திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பேருந்து நிலைய நடைமேடை பகுதியில் இனிப்பு கடைகள், ஹோட்டல்கள், டீக்கடைகள் அமைந்துள்ளது. இந்நிலையில் வீரமணி என்பவர் டவுன் பேருந்து நடவடி பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று ஹோட்டல் ஊழியர் இட்லி தயார் செய்வதற்காக சிலிந்தருடன் கூடிய அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சிலிண்டர் கேபிளில் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்ததும் ஊழியர் சிலிண்டரை வெளியே தள்ளி தீயை அணைக்க முயன்றார்.

இதனை பார்த்ததும் பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் படித்தனர். உடனடியாக அங்கு நின்ற பேருந்துகளும் வெளியேற்றப்பட்டது. இது குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிலிண்டரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக சிலிண்டர் வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.