திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜகோபாலபுரத்தில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கணவன், மனைவி இருவரும் விட்டல்நாயக்கன்பட்டியில் இருக்கும் தனியார் மில்லில் கூலி வேலை பார்த்து வருவதால் இரண்டு பேரும் மில்லுக்கு அருகில் இருக்கும் விடுதியில் தங்கியிருந்தனர்.

நேற்று விடுதி அறையில் யாரும் இல்லாத நேரம் சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சங்கீதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் சங்கீதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.