திருநெல்வேலி மாநகர போலீஸ் கட்டுபாட்டு அறையில் பாலமுருகன் என்பவர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விஜயலஷ்மி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கற்பக விநாயகம்(27), விக்னேஷ்(24) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் இளைய மகன் விக்னேஷ் மணிமுத்தாறு பாட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.

சமீபகாலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கற்பக விநாயகம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 19-ஆம் தேதி கற்பக விநாயகம் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கற்பக விநாயகத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கற்பக விநாயகம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.