கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி ஆறடி நகர் பகுதியில் பொய்கை அணை நீர் கால்வாய் செல்கிறது. அந்த  கால்வாயில் நேற்று இரவு பெரிய மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் செடிகளுக்குள் பதுங்கி இருந்த  மலைப்பாம்பை சாதூர்யமாக பிடித்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.