தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெங்கலாபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே தனியார் பிளாஸ்டிக் குடோன் அமைந்துள்ளது. நேற்று இரவு நேரத்தில் திடீரென குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுது நேரத்தில் குடோன் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.