சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் நெல், நிலக்கடலை, பருத்தி ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக சிவகங்கையில் பெய்த கன மழை காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமானது.

இதனையடுத்து கனமழையால் நல்லேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பொன்னையா என்பவரது வீட்டு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதே போல ராஜேஸ்வரி என்பவர் ஓட்டு வீடு இடிந்தது. சிவகங்கை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து பயிர்கள் பாதிக்கப்பட்டது. கனமழையால் அங்கு பல வீடுகள் இடிந்து சேதமானது.