ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பன் சத்திரம் பகுதியில் லீலா கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஐந்து வயதில் ஒரு மகனும் நான்கு வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கிருஷ்ணன் கடந்த 25-ஆம் தேதி நள்ளிரவில் ஆம்புலன்ஸை தொடர்புகொண்டு தனது மனைவி ஸ்ரீஜாவிற்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக கூறியுள்ளார்.

அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற மருத்துவ ஊழியர்கள் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு ஸ்ரீஜா இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் பெயரில் கிருஷ்ணனை பிடித்து விசாரித்த போது மது போதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததை கிருஷ்ணன் ஒப்பு கொண்டார். இதனால் கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது