கரூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் இருக்கும் பெட்ரோலியம் கம்பெனி அருகே பிரபு என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முருகவேல் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பிரபு மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரபுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முருகவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.