கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முருகனப்பள்ளி பகுதியில் சின்னப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேடியம்மா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் விவசாயியான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சின்னப்பாவின் குடும்பத்தினருக்கும், செல்வராஜுக்கும் இடையே நில பிரச்சனை இருந்துள்ளது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் செல்வராஜ் சின்னப்பாவையும், அவரது மனைவியையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த 2 பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் செல்வராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.