சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி ஆலமரத்து காடு பேருந்து நிறுத்தம் பகுதியில் இருக்கும் ஓடையில் குழந்தையின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஆண் குழந்தையின் உடலை வீசி சென்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.