தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சொர்ணக்காடு பணஞ்சேரி கிராமத்தில் பட்டதாரியான தீபிகா(22) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் விவேக்(27) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி பட்டுக்கோட்டையில் இருக்கும் பிள்ளையார் கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து பாதுகாப்பு கேட்டு இருவரும் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி காதல் ஜோடியிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.