புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளத்திவிடுதி தெற்குப்பட்டி பகுதியில் ரெங்கதுரை(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே உறவினரான ரெங்கசாமியின் மகன் கருப்பையா(25) வசித்து வருகிறார். இந்நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை ரெங்கதுரை தட்டி கேட்டுள்ளார். அப்போது கோபத்தில் கருப்பையா அரிவாளால் ரெங்கதுரையை வெட்டியுள்ளார். இதனால் அவரது வலது கையில் இருக்கும் இரண்டு விரல்கள் துண்டாகி விழுந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ரெங்கதுரைடை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து டாக்டர்கள் துண்டான விரல்களை தனி ஐஸ்பெட்டியில் அடைத்து மேல சிகிச்சைக்காக மதுரையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்த போலீசார் கருப்பையாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.