தெலுங்கானா மாநிலம் மஞ்செரியல் மாவட்டத்தில் உள்ள ரெட்டி காலனி பகுதியில், குடிபேட்டா பட்டாலியனில் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் சிரீஷா என்ற பெண் அதிகாரி, தனது கணவர் ரவி பிரசாத் மீது குடும்ப வன்முறை புகார் அளித்துள்ளார். காவலராகப் பணிபுரியும் ரவி பிரசாத், மதுபோதையில் அரை நிர்வாணத்துடன் தனது மனைவியை நடுரோட்டில் வைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
‼️ Trigger Warning ‼️
(The video is a shorter version of the original video)
The man in the video who is behaving like an animal and beating up his own wife and child is Constable Ravi Prasad, working with the Mancherial town police, Telangana.
His wife Shirisha works as… pic.twitter.com/9W8URzx4BQ
— Revathi (@revathitweets) February 3, 2026
இந்தத் தாக்குதலின் போது அவர்களின் சிறிய குழந்தை உதவி கேட்டு கதறியது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அருகில் இருந்தவர்கள் இந்த வன்முறைச் சம்பவத்தைக் காணொளியாகப் பதிவு செய்ததோடு, காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். பாதிக்கப்பட்ட சிரீஷா அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில், தீர்த்தஹள்ளி அருகே மேகரவள்ளி பள்ளிக்கு முன்பாக அதிவேகமாக வந்த கார் ஒன்று மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அசோக் மற்றும் அவரது மனைவி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த சில நிமிடங்களுக்கு முன்புதான் பள்ளி மாணவர்கள் அந்தச் சாலையைக் கடந்து சென்றதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. பள்ளிக்கு முன்பாக வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
