மேற்கு வங்காள மாநிலத்தில், மூன்றரை வயதே ஆன பிஞ்சு  பெண் குழந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதியும், அதனைத் தொடர்ந்து குற்றவாளியைக் கைது செய்யச் சென்ற போலீசாருக்கு நேர்ந்த விபரீதமும் தற்பொழுது பெரும் கொந்தளிப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பகுதியில் சைக்கிள் கடை ஒன்றின் அருகே, ஷேக் மஃபிஜுல் என்ற நபர் அந்தப் பிஞ்சுக் குழந்தைக்குக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை இழைத்ததாகக் கூறப்படும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து, அந்த நபரைக் கைது செய்யக் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, சிறிதும் பயமின்றி ஷேக் மஃபிஜுல் கத்தியை எடுத்துப் போலீசாரை ஓட ஓட விரட்டித் தாக்கியுள்ளார்; இந்தக் கொடூரக் கத்திக்குத்துத் தாக்குதலில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் ரத்தக் காயங்களுடன் படுகாயமடைந்தனர்.

காவல்துறையினரையே கொடூரமாகத் தாக்கியதைக் கண்டு ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற உள்ளூர் பொதுமக்கள், அந்த நபரை நாலாபுறமும் சூழ்ந்து மடக்கிப் பிடித்து நடுகோட்டில் வைத்து தர்மஅடி கொடுத்துக் கூண்டோடு வெளுத்து வாங்கிய பின் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்‌.

 

“>

ஒட்டுமொத்த மேற்கு வங்காளத்தையும் உலுக்கியுள்ள இந்த பகீர் சம்பவம் தற்பொழுது எக்ஸ் தளம் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் தீயாய் பரவி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.