நாடு முழுவதும் வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால் பறக்கும் படையினர் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் வண்டியூர் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு பறக்கும் படை அதிகாரிகள் அவ்வழியாக வந்த வாகனங்களில் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு வாகனத்தை சோதனை செய்தபோது அதில் தங்க நகைகள் இருந்தது. அதன் மதிப்பு சுமார் 4 கோடி ரூபாய் ஆகும். இதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் நகைகளை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.