திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே எட்டரை பகுதி அமைந்துள்ளது. இங்கு ஊராட்சி மன்ற தலைவி திவ்யா அன்பரசு வசித்து வருகிறார். இவருடைய கணவர் அன்பரசு காரில் பணம் எடுத்துச் செல்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பறக்கும் படை அதிகாரிகள் அவருடைய வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவருடைய வீட்டின் பூஜையறையில் இருந்த பையில் பணம் இருந்தது.

அதில் மொத்தம் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு பணம் இருந்தது. இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்த நிலையில் திவ்யா அன்பரசுவை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இதனால் அதிமுக கட்சியின் தொண்டர்கள் அவரின் வீட்டு முன்பும் காவல் நிலையத்தில் முன்பும் ஒன்று திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அதிமுக கட்சியின் பிரமுகரான அன்பரசு வீட்டில் கட்டு கட்டாக தேர்தல் சமயத்தில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.