அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குறுக்கு தெரு அருகே உள்ள வளவனேரி என்ற கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி பானுமதி. ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் அவருடைய மனைவி பானுமதி மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் மகன் பிரசாந்த், இரண்டு வயது இரட்டை குழந்தைகளான சாத்விக், சாத்விகா ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வீடு பூட்டி இருந்த நிலையில் வீட்டிலிருந்தே துர்நாற்றம் வீசியது.

உடனே அருகில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து பார்த்த போது மூன்று குழந்தைகள் தரையிலும் தாய் பானுமதி தூக்கில் தொங்கிய நிலையிலும் இறந்து கிடந்துள்ளனர். மூன்று பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தற்கொலையா அல்லது கொலையா என்று விசாரித்து வருகிறார்கள்.