குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் நிகுஜன் குமார் அம்ரித் பாய் படேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் படேல் அந்த பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் அப்பெண்ணுக்கு படேலுக்கு ஏற்கனவே திருமணமானது தெரிய வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெண் படேலுடன் சண்டை போட்டுவிட்டு அவருடன் பேசாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த படேல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதன் பிறகு அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை வைத்துவிட்டு இதை வெளியில் சொன்னால் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை வெளியில் விட்டு விடுவேன் என்று மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதுகுறித்து அந்த பெண் தான் பெற்றோரிடம் கூறவே அவர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த போலீசார் படேலை கைது செய்துள்ளனர்.