நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…  பெயரை வைத்துக்கொண்டு வேலை செய்வது அவர்களது இன்றைய பழக்கமல்ல. இது பல வருடங்களுக்கு முன்பே அவர்களிடம் இருக்கும் வழக்கம். பெயர் மாற்றம் செய்துவிட்டு நாட்டை ஆண்டு விடலாம் என்று நினைக்கிறார்கள். நான்கு புறமும் இவர்களது பெயர் நன்றாக தெரியும். ஆனால் இவர்கள் செய்த வேலை  என்ன  என்பது தெரியவில்லை ?

மருத்துவமனைகளின் பெயர் அவர்களுடையது தான்,  ஆனால் அங்கே சிகிச்சை நடப்பதில்லை. பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், அரங்குகள், ஏழைகள் நல திட்டங்களில் அவர்களுடைய பெயர், விளையாட்டு வீரர்களுக்கான விருதுகளில் அவர்களுடைய பெயர்,  விமான நிலையங்கள் அவர்களுடைய பெயர். ஆனால் இந்த திட்டங்களில் பலஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார்கள்.

சமுதாயத்தின் கடை கோடியில் இருக்கும் ஒருவன் இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான், ஆனால் அவனுக்கு கிடைத்தது என்ன ? அவனுக்கு கிடைத்ததெல்லாம் ஒரு குடும்பத்தின் பெயர் மட்டும் தான். காங்கிரஸ் உடன் தொடர்புடைய ஒரு பொருளும் அவர்களுடையது அல்ல. தேர்தல் சின்னத்தில் தொடங்கி – கொள்கைகள் வரை எதுவும் அவர்களுடையது இல்லை.

எல்லாம் வேறு நபர்களிடம் இருந்து அவர்கள் எடுத்துக் கொண்டது. மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…  தங்களுடைய குறைகளை மறைப்பதற்காக சின்னம் மற்றும் கொள்கைகளை பிறரிடம் இருந்து திருடி இருக்கிறார்கள். எல்லாவற்றிலும் அவர்களின் ஆணவம் தான் தெரிகிறது என தெரிவித்தார்.