திருப்பதி மற்றும் காட்பாடி சிறப்பு ரயில் சேவை பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருப்பதியில் இருந்து காலை 10.55 மணிக்கு காட்பாடி செல்லும் சிறப்பு ரயில் மறு மார்க்கமாக காட்பாடியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு திருப்பதி செல்லும் சிறப்பு ரயில் ஆகிய ரயில்கள் வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை விழுப்புரம் 5.30 மணிக்கு திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி சிறப்பு ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும் எனவும் மறு மார்க்கமாக இந்த ரயில் வழக்கமாக திருப்பதிக்கு பதிலாக காட்பாடியில் இருந்து பிற்பகல் 4.40 மணிக்கு புறப்பட்டு வழக்கம் போல விழுப்புரம் சென்றடையும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.