கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான 113 என்று நம்பரையும் தாண்டி காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மாநிலம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதேபோல் புதிய ஆட்சியை அமைக்கவும் காங்கிரஸ் நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர். அந்த வகையில்,முன்னிலை வகிக்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் பெங்களூர் வரும்படி கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.