கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றது. தற்போது வரை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பெரும்பான்மைக்கு தேவையான 113 என்ற எண்ணிக்கையை தாண்டி 120 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் புதிய அரசை அமைக்கும் குஷியில் காங்கிரஸ் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல வெற்றி முன்னிலை வகித்து வரும் வரும் அனைவரையும் பெங்களூருக்கு வரும்படி காங்கிரஸ் கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே காங்கிரஸ் கட்சியின் அடுத்த முதல்வர் யார் என்ற குழப்பம் காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் சித்தாராமையாவின் மகன் யதேந்திர சித்தராமையா, எனது அப்பாவை முதல்வராக்க வேண்டும். தந்தையை முதல்வராக்க வேண்டும் என பேட்டி அளித்துள்ளார்.