தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் கஞ்சா கருப்பு. இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சிவகங்கையில் நடிகர் கஞ்சா கருப்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது “தற்போது அதிமுகவில் நடப்பது அங்காளி பங்காளி சண்டை. இது கூடிய விரைவில் முடிவுக்கு வரும் என அதிமுக உறுப்பினரும், நடிகருமான கஞ்சா கருப்பு தெரிவித்திருக்கிறார். மேலும் இபிஎஸ் பொதுச்செயலாளராக பதவியேற்றதற்கும் அவர் முதல்வராக வேண்டும் என்றும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தீச்சட்டி எடுக்க இருக்கிறேன். கூடிய விரைவில் நல்லாட்சி அமையும் என்று கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார்.