நாகர்கோவில் மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று ராகுல் காந்தி கைதை கண்டித்து நாகர்கோவில் பாஜக அலுவலகம் முன் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போகுமாறு பாஜகவினர் வலியுறுத்தியதால் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இரு தரப்பினரும் கற்களை வீசித் தாக்கிக் கொண்டதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தர்மராஜ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.