முதுமலைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக ஓய்வு விடுதிகளும் ஓட்டல்களும் 4 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுவதாகவும், ஏப்ரல் 7 முதல் 9 ஆம் தேதி வரை வனவிலங்குகளை காணும் வாகன சவாரியும் நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அங்கு பிரதமர் வருகையை ஒட்டி தெப்பக்காட்டை ஒட்டிய யானைபாடி, லைட்பாடி, தெக்குபாடி ஆகிய பழங்குடி கிராமங்களில் நடைபாதை அமைப்பது, வீடுகளுக்கு வர்ணம் பூசுவது உள்ளிட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.