திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுகுழிப்பட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சேர்வீடு பிரிவு பகுதியில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சுரேஷின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை பார்த்ததும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தப்பி ஓடினார். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.