அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் அதிமுக மற்றும் தேமுதிகவினுடைய கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டு தேமுதிமுகவிற்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருக்கக்கூடிய எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும்,  அதே போல புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதியும் என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக இந்த மூன்று கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடி வடைந்த நிலையில் அதிமுகவில் இருக்கக்கூடிய முதற்கட்ட 16 வேட்பாளர்களையும் அறிவித்தார். இன்னும் சற்று நேரத்தில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட இருக்கிறார். அதிமுக தலைமையகம் வந்த எடப்பாடி வேட்பாளரை அறிவித்தார்.