தாமதமாக மானியத்தை செலுத்துவதால் மாணவர்களின் கல்விக் கடன்  வட்டியாக சேர்க்கப்படுவதாக நீதிபதி வேதனை தெரிவித்து இருக்கின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த டாக்டர் வெங்கட்ராமன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு மருத்துவம் படிக்க சீட் கிடைத்தது. 2014 ஆம் ஆண்டு பேங்க் ஆப் இந்தியா வந்தீங்கில் ஏழரை லட்சம் கல்வி கடன் பெற்றேன். படிப்பை முடித்து வேலை கிடைத்த ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் வரை இந்த கல்வி கடன் தொகை காண வட்டியை அரசாங்கமே வங்கிக்கு செலுத்தி விடும் என தெரிவித்தனர்.

2019 ஆம் ஆண்டில் எனக்கு வேலை கிடைத்தது. தற்போது கல்வி கடன் அசல் தொகையும் 4 லட்சத்து 90 ஆயிரத்தை செலுத்திய உள்ளேன். மீதம் வட்டியுடன்5 லட்சத்து 19,391 ரூபாய் தான் உள்ளது. ஆனால் இன்னமும் 6 லட்சத்து 94 ஆயிரத்து 784 ரூபாய் செலுத்தும் படி வங்கியினர் தெரிவித்தனர். விசாரித்த போது 2015 மற்றும் 2017 வரையிலான காலத்திற்கு வட்டி தொகையை உரிய நேரத்தில் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் செலுத்தாதால் அந்த வட்டி தொகையும் தங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

இது சட்டவிரோதம்,  உரிய நேரத்தில் வட்டி தொகையை செலுத்த மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உத்தரவு  இட வேண்டும் இந்த மனுவில் கூறி இருந்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் கல்வி கடன் தொகைக்கான வட்டி  மனித வள மேம்பாட்டு அமைச்சகம் செலுத்த தாமதித்ததால் அந்த வட்டி தொகையை மனுதாரர் கடனுடன் வங்கி சேர்த்துள்ளது. இதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்பதையும்,  நடைமுறை சிக்கலையும் மத்திய அரசு வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்த வேண்டும்.

கல்வி கடனுக்கு தொடர்பான பல வழக்குகளில் இது போன்ற சிரமங்களை வங்கி எதிர்கொள்கின்றன என்பதும்,  இந்த நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதற்கு ஏற்ப பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கும் வகையில் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மானியத்தை  வட்டியுடன் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த வழக்கில் இறுதி தீர்ப்புக்காக வருகின்ற ஐந்தாம் தேதிக்கு ஒத்தி வரப்படுகிறது என நீதிபதி ஆனந்த வெங்கடேசன் உத்தரவிட்டுள்ளார்