மத்திய அரசின் புதிதாக சாலையோர வியாபாரிகளின் வணிகத்திற்கு உதவும் விதமாக பிரதமரின் தற்சார்பு நிதி என்ற திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்திலும் வால்பாறையில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வணிக செலவிற்காக கடன் உதவி வழங்கப்பட உள்ளது.

வங்கி மூலமாக ஒவ்வொரு வியாபாரிகளுக்கும் தலா 10,000 ரூபாய் கடன் உதவி வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி சாலையோர வியாபாரிகளுக்கு அவர்களுடைய வியாபாரத்துக்கு உத வும் வண்டி வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் இந்த கடனை பெற விரும்பினால் குடும்ப அட்டை மற்றும் ஆதார் கார்டு எடுத்து சென்று நகராட்சி அலுவலகத்தில் செயல்படும் நகரமைப்பு பிரிவு அலுவலகத்திற்கு சென்று நேரில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.